ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை...அமித்ஷா ஆவேசம்!
Dinamaalai June 20, 2025 03:48 AM


 
தலைநகர் டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி. இவரது ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.  


மேலும், “மாற்றம் சாத்தியமில்லை என நினைப்பவர்கள், உறுதியான மக்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள். நமது மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள், அவர்கள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.  மேலும் ”இந்தியா, அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதத்தைப் புரிந்துகொள்ள வெளிநாட்டு மொழிகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. முழுமையற்ற வெளிநாட்டு மொழிகள் மூலம் இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.


இந்தப் போராட்டம் எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்திய சமூகம் நிச்சயமாக இந்தப் போரில் வெற்றி பெறும் என நான் முழுமையாக நம்புகிறேன். நமது சொந்த மொழிகளில் சுயமரியாதையுடன் நாட்டை நடத்துவோம், உலகையே வழிநடத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.