திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்... அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு!
Dinamaalai June 20, 2025 04:48 PM

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெறும் திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்றுஆய்வு மேற்கொண்டார். 

முன்னதாக, கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு, அதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.