தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). இவரது வீட்டில் அண்மையில் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்க்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிஷ் லாஸ் மகன் மோகன் (எ) சகாயராஜ் (48), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சதீஷ் (37), சாத்தூர் புல்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜா (43) மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பொன்முருகன் (53) ஆகியோர் என்பதும் கடந்த 01.06.2025 அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சக்கரபாணிநகரைச் சேர்ந்த கிருஷ்ணன்பிள்ளை மகன் நல்லசிவன் (67) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் 4பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி மேற்படி திருடப்பட்ட நகைகளில் சுமார் 16½ பவுன் தங்க கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை எதிரிகளிடமிருந்து கைப்பற்றி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது