கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை அதிமுக எம்.எல்.கந்தசாமி ஏ உடல் நலக்குறைவால் காலமானார்
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் கோவையை சேர்ந்த அமுல் கந்தசாமி .60 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார். அதனை தொடர்ந்து அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ உள்பட பலர் வந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் அமுல் கந்தசாமி உடல்நிலை திடீரென மோசமடைந்தது.உடனடியாக டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சரியாக மதியம் 3.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தனர்.அவரது மறைவுச் செய்தி கேட்டு குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். தொகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக, ஒரு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால், உடனடியாக தேர்தல் ஆணையமும் உடனடியாக அந்தத் தொகுதியை காலியானதாக அறிவிக்கும். ஆனால், அதன்பிறகு, சட்டசபை தேர்தலுக்கு 4 மாதமே இடைவெளி இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்றே தெரிகிறது.