திருமாவளவன் ஊரை ஏமாற்றுகிறார்- ஹெச். ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
Top Tamil News June 22, 2025 05:48 AM

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேட்டுக்கொண்டார்.

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் நாளை காலை ஏழு மணிக்கு முருகை மாநகரத்தில் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்று அனைவரையும் பத்திரமாக வழி அனுப்புவேன் என செய்திகளிடம் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா தெரிவித்தா. 

இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டு பாஜக பள்ளி மாணவ மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் யோகாசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, எச். ராஜா, மதுரையில் நாளை இந்து முன்னனி சார்பில் நடைபெற உள்ள  முருக பக்தர்களின் மாநாட்டுக்கு 52 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற மற்ற மாநாட்டுக்கெல்லாம் இந்த விதிமுறையை விதித்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

முருகபக்தர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் விமர்சனம் செய்கிறார். இந்த மாநாடு தோல்வி அடையும் என கூறுகிறார்.. தமிழன் என்று கூறிக்கொள்ளும் திருமாவளவன் நெற்றியில் பூசிய திருநீரை அழிக்கிறார். தமிழன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றுகிறார். முருக பக்தர் மாநாடு வெற்றி பெரும் என எச் ராஜா தெரிவித்தார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.