மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் மும்பை ஆரே காலனியில் உள்ள சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் 60 வயது பெண்மணி ஒருவர் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அவரது பெயர் யசோதா கெய்க்வாட் எனத் தெரியவந்தது.
அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்த நிலையில் அவர் தனது பேரன் தன்னை குப்பைக் கிடங்கில் விட்டுச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். அந்தப் பெண்மணி தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, காலையில் அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டாலும், மாலை 5:30 மணிக்குள் மட்டுமே காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்க முடிந்தது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்ததால், இறுதியில் அவர் கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரது புகைப்படம் காவல் நிலையங்களில் பகிரப்பட்டுள்ளது அவருடைய பேரன் ஏன் இது போன்ற மனிதாபிமானமற்ற செயலைச் செய்தான் என்பது தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது