காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை... கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு!
Dinamaalai June 24, 2025 02:48 PM

தூத்துக்குடி மாவட்டம் நவலடியூர், தோப்படியூர் கிராமத்தில் ஆற்று குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்கள் ஊரில் பட்டியலின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றோம். எங்களது ஊர் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளனது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக எங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் பக்கத்து ஊருக்கு சென்று தண்ணீர் எடுத்தால் சண்டை சச்சரவு ஏற்படுகிறது. எனவே எங்கள் கிராமத்தில் ஆற்று குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.