திருச்செந்தூரில் ரூ.1கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
Dinamaalai June 24, 2025 05:48 PM

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் உள்ள கொம்புத்துறை கடற்கரை  பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பிரிவு உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கொம்பு துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வாகனத்திலும்  பதிவு எண் இல்லாத ட்ரெய்லருடன் கூடிய சோனாலிகா என்ற டிராக்டரிலும் கொண்டுவரப்பட்ட சுமார் 30 கிலோ வீதம் 103 மூட்டைகளில் இருந்த சுமார்  3000 கிலோ பீடி இடலைகளை போலீசார் கைப்பற்றறினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், டிராக்டர், மற்றும் மோட்டார் பைக் பறிமதல் செய்யப்பட்டது. 

பீடி இலைகளை கடத்த முன்றவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். கைப்பற்றபட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்கள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.