400-வது ஷோருமை தொடங்கிய மலபார் கோல்ட் & டைமண்ட்.. ரூ.78,000 கோடி வருமானம் இலக்கு!

ஜூன் 23 அன்று மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனம், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனது 400வது ஷோரூமைத் திறந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் விரிவாக்கத்தில் ஒரு மைல்கல்லாக உள்ளது.
இந்த நிறுவனம் 1993-ல் கேரளாவின் கோழிக்கோடில் தொடங்கப்பட்டது. இப்போது இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் தனது ஷோரூம்களை வைத்துள்ளது.
மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனம் 2026 நிதியாண்டில் ரூ.78,000 கோடி வருவாய் ஈட்டும் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக, நகை சில்லறை விற்பனையாளர் நிறுவனம் 60 புதிய ஷோரூம்களைத் திறக்க இலக்கு வைத்துள்ளது, இது 15 நாடுகள், 22 இந்திய மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு தனது இருப்பை விரிவுபடுத்துகிறது. நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட புதிய சர்வதேச சந்தைகளிலும் நுழைய திட்டமிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர், தற்போது 13 நாடுகளில் ரூ.63,000 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. மார்ச் 2026 இல் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் வருவாயை ரூ.78,000 கோடியாக உயர்த்தவும், 60 புதிய கடைகளைத் திறக்கவும் இலக்கு வைத்துள்ளது.வரும் காலங்களில் மேலும் 100 புதிய ஷோரூம்கள் திறக்கவும், பன்னாட்டு விரிவாக்கத்தை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் உலகளாவிய பணியாளர்களை கிட்டத்தட்ட 27,250 நிர்வாகக் குழு உறுப்பினர்களாக விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
“Make in India, Market to the World” என்ற கொள்கையை பின்பற்றி, இந்தியாவின் நகைத் தொழிலாளர்களுக்கு உலக சந்தையில் வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அஹமத் கூறுகையில் “இந்த வளர்ச்சி எங்கள் கலைஞர்களின் உழைப்பையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மலபார் கோல்ட் & டையமண்ட்ஸ் உலகளாவிய நகை வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது, மேலும் இந்தியாவின் நகை தொழில்துறையின் பெருமையை உலகளவில் எடுத்துச்செல்லும் நிறுவனமாக மாறி வருகிறது.