வெடித்து சிதறிய ஏசி... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்!
Dinamaalai June 24, 2025 02:48 PM

சாத்தான்குளம் அருகே வீட்டில் இருந்த குளிரூட்டி வெடித்து சிதறியதில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேங்காய் வெட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது வீட்டில் வழக்கம்போல் நேற்றிரவு ஏசி போட்டு தூங்கி உள்ளனர்.  இன்று அதிகாலை ஏசியை ஆஃப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு காலையில் வழக்கமான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வீட்டில் இருந்த ஏசி வெடித்துச் சிதறியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிலின் மேல் இருந்த மெத்தை முழுவதுமாக எரிந்து வீடு முழுவதும் கரும்புகையாய் காணப்பட்டது. 

மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஏசி வெடித்த சத்தம் கேட்டு அலறி அடித்து அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். ஏசி வெடித்த சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த இரண்டு மெத்தைகள், டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் ஆகின. அணைத்து வைக்கப்பட்டிருந்த ஏசி அதிகாலையில் திடீரென்று எப்படி வெடித்தது என்று தெரியவில்லை என ரவியின் குடும்பத்தார் தெரிவித்தனர். இச்சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.