“சோசியல் மீடியா நண்பனை நம்பி பிறந்தநாள் விழாவுக்கு சென்ற பெண்”… 2 நாட்களாக அடைத்து வைத்து மாறி மாறி… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!!
SeithiSolai Tamil June 28, 2025 01:48 PM

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகத்தில் நண்பராக இருந்த ஒருவன், பிறந்த நாள் விழாவிற்காக அழைக்கிறோம் என்று கூறி, ஒரு பெண்ணை தாபாவிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் கலபிபால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர். இவர் உஜ்ஜைன் நகரம் செல்லும்போது, கலபிபால் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது சமூக ஊடக நண்பரான ரிங்கு பர்மர், ஷுஜல்பூரில் பிறந்தநாள் விழா என்று கூறி அழைத்துள்ளார். பின்னர் ரிங்கு மற்றும் அவரது நண்பர் நரேந்திரா கோலி இருவரும் அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்து சென்று, மெஹர்கெடி சாலையில் உள்ள ‘சாந்துஷ்டி தாபா’வுக்கு கொண்டுசென்றுள்ளனர்.

தாபாவின் மூன்றாவது மாடியில் உள்ள அறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற இருவரும், பிறகு அந்த இடத்தில் தங்கியிருந்த ராம்ஸ்வரூப் பிலாலா என்ற நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரிங்கு மற்றும் நரேந்திரா ஆகியோர் மீண்டும் அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்று, அகோடியா சாலை பைபாஸ் அருகே உள்ள பண்ணை வீட்டில் தனிமையில் வைத்துள்ளனர். அங்கு உணவு வழங்கிய பின்பு நரேந்திரா வெளியேற, பின்னர் ரிங்கு மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறாக, இரு இடங்களிலும் இரு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகிய அந்தப் பெண், இறுதியாக சிக்கலான சூழலில் இருந்து தப்பித்து, 100 மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளிகள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரிங்கு பர்மர், நரேந்திரா கோலி மற்றும் ராம்ஸ்வரூப் பிலாலா ஆகிய மூன்று பேரின் மீதும் பாலியல் பலாத்காரம், அபகரிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூரமான சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், சமூக ஊடகங்களில் நீண்ட விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.