8 மாத கர்ப்பிணி பெண்ணைக் கொலைச் செய்து விட்டு, கள்ளக்காதலன் தூக்கில் தொங்க விட்ட கொடூரம் கிருஷ்ணகிரியை கதிகலங்க செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தமூர்த்தி என்பவரின் மகள் ஷாலினி (25) என்பதும், அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது.
ஷாலினி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஷாலினியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட அவர் கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.
ஷாலினியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் 19ம் தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். செல்போன் சிக்னல்களில் பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மேகநாதன் தனது நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஷாலினியின் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில், “பல்லேரிப்பள்ளியை சேர்ந்த ஷாலினிக்கும், வேப்பனஹள்ளி அருகே உள்ள என் தாசிரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறியை சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தான் ஷாலினிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினி அவரது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் ஷாலினி கர்ப்பமானார்.
8 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், எனது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று வாழலாம்’ என ஷாலினி கூறினார்.
அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்பாத நான், அவரை திருமணம் செய்து ஏமாற்றி வந்தேன். ஆனாலும் ஷாலினி விடாமல் தொடர்ந்து அடிக்கடி செல்போனில் பேசி வாக்குவாதம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்று கூறினார். வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் ஷாலினியைக் கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பர் புகழேந்தியை (19) என்பவரை அழைத்துச் சென்றேன்.
நான், ஷாலினி, புகழேந்தி 3 பேரும் ஒரே பைக்கில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் புகழேந்தி உதவியுடன் ஷாலினியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.
ஷாலினியை காணவில்லை என்று அவரது கணவர் ஆஞ்சி மற்றும் குடும்பத்தினர் தேடுவதை அறிந்தேன். போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனாலும் செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது