தான் நீதிபதியின் மகள் என போலீசாரை மிரட்டியதாக பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பியம் காவல் நிலையத்திற்கு பெண்மணி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், “தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் எனவும், செம்பியத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டதற்கான கட்டணம் ரூ.1,500யை செலுத்தி விடுமாறும் கூறியுள்ளார். உடனே அந்த காவல் நிலைய போலீசார் உணவகத்திற்குச் சென்று பணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மீண்டும் அதே பெண் செம்பியம் காவல் நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டு, செம்பியத்தில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட செம்பியம் காவல் நிலைய போலீசார் ஹோட்டல் அறை வாடகையை செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அந்த பெண், செம்பியம் காவல் நிலையத்தை நேற்று தொடர்பு கொண்டு, தனக்கு குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து உணவு வாங்கித் தரவேண்டுமென்றும், இல்லையெனில் செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்ட போலீசார், இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உடனடியாக அந்தப் பெண் தங்கியிருப்பதாக கூறிய விடுதியில் சோதனையிட்டனர். அதில், நீதிபதியின் மகள் என்று கூறி தொலைபேசியில் மிரட்டிய பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அதிகாரிகளின் விசாரணையில் அவர் பெரம்பூர் அகரத்தைச் சேர்ந்த ரேகா (45) என்பதும், சென்னை காவல்துறையில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்திருந்ததும், கடைசியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை பணிபுரிந்துவிட்டு பணிக்கு வராமல் நின்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேகாவைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது