மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர். இவர் பொதுமக்கள் பற்றி பேசிய ஒரு விஷயம் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது,
இங்கே இருக்கும் சிலர் குறிப்பாக சில இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எங்கள் கட்சியை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள், கான்கிரீட் சாலைகள், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மண்டபங்கள் போன்றவற்றை கொடுத்துள்ளோம்.
உங்களுடைய கிராமத்திற்கு அரசின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைத்துள்ளது. நாங்கள் விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். அவர்களின் தந்தைகளுக்கு பென்ஷன் கொடுக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கிறார்.
உங்களுடைய சகோதரிகளும் அரசின் திட்ட மூலம் பயன் பெறுகின்றனர். உங்களிடம் இருக்கக்கூடிய உடைகள், காலணிகள் மற்றும் செல்போன்கள் போன்றவைகள் எங்களுடையது தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பேச்சுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.