பிரயாக்ராஜில் விபுல் ஜெயின் என்பவர் ஐஐஐடி இறுதியாண்டு படித்து வருகிறார். பி டெக் ஐ.டி மாணவரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் டேட்டா “Rubrik” நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 1.45 லட்சம் கோடி மதிப்புள்ளான வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இது அந்த நிறுவனத்தில் இதுவரை கண்டிராத மிக உயர்ந்த சம்பளமாகும். இந்த செய்தி அந்நிறுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு வேலை செய்பவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் முகுல் ஷரத் சுதவானே கூறியதாவது, விபுலை வாழ்த்தி, முழு வளாகத்திற்கும் இது ஒரு பெரிய தருணம் என்று கூறினார். இது எங்கள் மாணவர்கள் என்ன திறன் கொண்டவர்கள் என்பதையும் தொழில்நுட்ப கல்வியில் நாங்கள் எவ்வாறு தொடர்ந்து முன்னேறி வருகிறோம் என்பதையும் காட்டுகிறது என்று தெரிவித்தார். இதே போன்று 70 மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் முதல் 69 லட்சம் வரை சம்பளத்தில் வேலை பெற்றுள்ளனர்.