அஞ்சல் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றவும் பாராட்டவும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய அஞ்சல் பணியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அஞ்சல் அதன் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதிலும், இந்த செயல்பாட்டில் மக்களையும் சமூகங்களையும் இணைப்பதிலும் இந்த அறியப்படாத ஹீரோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தேசிய அஞ்சல் பணியாளர் தினத்தின் வரலாறுஅஞ்சல் ஊழியர்கள் தினம், இந்திய அஞ்சல் துறையின் வரலாற்றையும், அதன் ஊழியர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறது.
1997 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள ஒரு தபால் நிறுவனம், சக தபால் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய தபால் பணியாளர் தினமாக அறிவித்தது. அப்போதிருந்து, இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கடந்த, 1854ல், இந்தியாவில், நவீன தபால் அமைப்பு துவங்கப்பட்டது, இதன் மூலம் மக்களுக்கு தகவல் பரிமாற்றம் எளிதாகியது. இன்று, அஞ்சல் ஊழியர்கள், கடிதங்களை வினியோகிப்பது மட்டுமின்றி, வங்கி சேவைகள், ஆதார் புதுப்பித்தல் மற்றும் அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
கிராமப்புறங்களில், மக்களின் நம்பிக்கையான இணைப்பாக விளங்குகின்றனர், தபால் ஊழியர்கள். பலருக்கு அரசு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உதவுகின்றனர்.
இந்த நாளில், நாடு முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தபால் அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதில், ஊழியர்களுக்கு பாராட்டு விழாக்கள், விருது வழங்கல் நிகழ்வுகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மூத்த அஞ்சல் ஊழியர்களின் சேவைகள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்படும். சில இடங்களில், அஞ்சல் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதி, அவர்களின் பணியை பாராட்டுகின்றனர், பொதுமக்கள்.
இந்த நாள், அஞ்சல் ஊழியர்களின் அர்ப்பணிப்பை மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை இணைக்கும் அஞ்சல் துறையின் பங்களிப்பையும் வெளிச்சமிடுகிறது.
மழை, வெயில் மற்றும் பனி என, எந்த சூழலிலும் தங்கள் கடமையை செய்யும் இவர்களின் உழைப்பு, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தொடர்பை ஏற்படுத்துகிறது.
இந்த தினம், அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் பணியை மதிக்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.