இனி ரயிலில் பிடிச்ச சீட்டை தேர்வு செய்யலாம்... அசத்தல் அறிவிப்பு!
Dinamaalai July 02, 2025 03:48 AM


 
இந்தியன் ரயில்வே  பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில்  பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யலாம். இது குறித்த புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த முயற்சி, பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பயணிகள் முன்பதிவு  தற்போது  விமானங்களில் உள்ள வசதியைப் போல, தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்வு செய்து கொள்ளலாம்.  டிசம்பர் 2025 முதல் இத்திட்டம்  அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகளுக்கான  சலுகைகளும் ஒருங்கிணைக்கப்படும்.


ரயில்களில் பயணச்சார்ட் 4  மணி நேரத்திற்கு முன் தயாராகி வரும் நிலையில்   இனிமேல் 8 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயார் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது தொலைதூரப் பயணிகளை முன்னோக்கி திட்டமிட உதவும்.
ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், ஆதார் அங்கீகாரம் பெற்றிருந்தாலே மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இது, ஒரு சில ஏஜெண்டுகள் ஒரே நேரத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே தகவல் அமைப்புக்கான மையமான CRIS, நவீன PRS அமைப்பை உருவாக்கி வருகிறது. இது நிமிடத்துக்கு  1.5 லட்சம் முன்பதிவுகள் மற்றும் 40 லட்சம் கேள்விகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.  இதன் புதிய நடவடிக்கைகள் அனைத்தும், இந்திய ரயில்வேயை பயணிகளுக்குத் தேவையான வசதிகளுடன் நவீன முறையில் மாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.