“இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்”… ஒரு இன்ச் அளவு கூட தோண்டக்கூடாது… கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்த நபர்… வீடியோ வைரல்…!
SeithiSolai Tamil July 05, 2025 02:48 PM

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஆச்சரியமானதாகவும் சிரிப்பூட்டு விதமாகவும் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்கும் விதமாகவும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தான் இந்தியாவில் உள்ள ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது கவனத்தை வைத்துள்ளது.

இது எந்த இடத்தில் எந்த மாநிலத்தில் நடந்தது என்று விவரம் தெரியவில்லை. அதாவது தன் வீட்டின் பக்கத்தில் மற்றொருவர் வீடு கட்டும் நிலையில் தன் வீட்டின் எல்லையில் ஒரு இம்மி அளவு கூட அவர் தோண்டி விடக்கூடாது என்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளர்கள் பக்கத்தில் அமர்ந்துவிட்டனர்.

அவர் அமர்ந்திருக்கும் இடத்தை ஒட்டி ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டுகிறார்கள். மேலும் இந்த வீடியோவை நடிகர் வடிவேலுவின் காமெடியுடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வெளியிட அது தற்போது மிகவும் வைரலாகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dinamathi (@dinamathi)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.