பன்கிபூர் கிளப்பில் இருந்து அவர் நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தமது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரில் இருந்து கோபால் கெம்கா கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் கெம்கா சம்பவ இடத்திலேயே பலியானார்.