நாளை ஜூலை 9ம் தேதி புதுசேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்றும், கால் டாக்ஸிகளும் இயங்காது என்றும், இந்த போராட்டம் முழு வெற்றி பெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையில் இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் மத்திய பாஜக அரசு தொழிலாளா் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டிக்கும் வகையில் இப்போராட்டம் நடக்கிறது.
ஏற்கனவே இந்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்போது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடா்பாக போா் நடந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும்போது, புதுவையில் ஏன் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறீா்கள் என கேட்கலாம். மற்ற மாநிலங்களில் தொழிற்சங்கங்கள் பேச்சுவாா்த்தை நடத்த முடிகிறது. ஆனால் மத்தியில் உள்ளது போல புதுவையிலும் பாஜக ஆட்சி நடத்துகிறது. இங்குள்ள அரசு தொழிலாளா்களின் பிரச்சனைகள் கவனிப்பாரற்று கிடக்கிறது.
அதனால் தான் தொழிலாளா் நலன், மக்களின் பிரச்னையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டத்தை புதுவையில் முழு அடைப்புப் போராட்டமாக நடத்துகிறோம். இதற்குத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள், அரசு பணியில் உள்ள ஒப்பந்த ஊழியா்கள், குப்பைத் தொழிலாளா்கள், தனியாா் மருத்துவம், பொறியியல் கல்லூரி ஊழியா்கள், தனியாா் பள்ளி ஊழியா்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் இந்தப் போராட்டம் நடந்தாலும் ஒரு சில இடங்களில் கோயில் திருவிழாக்கள் நடப்பதால் நிலைமைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதியில் உள்ள எங்கள் அமைப்பினா் முடிவு எடுப்பாா்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?