யூகங்களின் அடிப்படையில் ஓட்டுனர் ஓட்டினால், குழந்தைகளுக்கு அபாயமாக முடியும்... தமிழிசை!
Dinamaalai July 08, 2025 08:48 PM

 


 

கடலூர் மாவட்டத்தில்  சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில்  வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும்  ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே  செம்மங்குப்பம்  எனும்  பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை இந்த  ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது , ரயில் மோதி விபத்துக்குள்ளானது.  வேன் ஓட்டுநர் உட்பட 5 பள்ளி குழந்தைகள்  வேனில் பயணம் செய்தது.  

இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி மாணவர்கள்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.   சிகிச்சை பெற்றுவந்த செழியன் (15) என்கிற மாணவனும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்திற்கு ரயில்வே கேட்  மூடப்படாதது தான் காணரம் என தெரியவந்துள்ளது. கேட் கீப்பர் அலட்சியமாக தூங்கி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில்,  ஓட்டுநர் கேட்டுக் கொண்டதாலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.  
 
இதுகுறித்து  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “செம்மங்குப்பத்தில்... ரயிலும். பள்ளி வாகனமும் மோதி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2  குழந்தைகள் பலியானது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.. அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..... சிகிச்சையில் இருப்பவர்கள் மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்..வாகன ஓட்டுநர்..  ரயில்வே ஊழியர்... யார் தவறு செய்தாலும்.  கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது. இரட்டிப்பு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்,.. யூகங்களின் அடிப்படையில்... ஓட்டுனர் ஓட்டினால் அது குழந்தைகளுக்கு அபாயமாக முடியும்... 

செம குப்பத்தில் அந்த இடத்தில் பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிதி ஒதுக்கி ஓராண்டு காலமாக இடம் தேர்வு செய்து தரப்படவில்லை என்று கடலூர் ஆட்சியர் மீது ரயில்வே நிர்வாகம் தங்களது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறது. அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் எடுத்து பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இலக்குகள் சரியாக திட்டமிடப்பட வேண்டுமே தவிர... இழப்புகள்தான்.. இதற்கு வழிவகை செய்யும் என்ற நிலை இருக்கக் கூடாது.. என்பதை கவலையோடு பதிவிடுகிறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.