“முதல்வரா இருந்தாலும் சந்நியாசி முன்னாடி தரையில் தான் உட்காரனும்….” தமிழகத்தில் விரைவில் ஆன்மீகம் கலந்த ஆட்சி…. முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு….!!
SeithiSolai Tamil July 11, 2025 07:48 PM

தமிழகத்தில் ஆன்மீகம் கலந்த ஆட்சி விரைவில் உருவாகும் என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை காமாட்சிபுரி ஆதீனத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஆன்மீகத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசியலின் மீது அதன் தாக்கம் குறித்து உரைக்கூறினார்.

அவர் கூறியதாவது: “இந்த நாட்டின் ஆன்மீக அடையாளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்று பலர் கடைபிடிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றம் விரைவில் ஏற்படும். அந்த மாற்றம் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு செயல்படும். கோவில்களுக்கு மரியாதை கொடுக்கப்படும். ஞான குருக்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும் ஆட்சி தான் உருவாகப்போகிறது” என உறுதியுடன் கூறினார்.

மேலும், “ஒரு அரசியல் தலைவர் என்ற நிலை யாருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் ஒரு சந்நியாசி முன்னிலையில், அவர் எந்த பதவியில் இருந்தாலும் தரையில் அமர்ந்து தான் பேச வேண்டும் என்பதே பாரத தேசத்தின் கலாசாரம். இது நம்முடைய தாய் மண்ணின் மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியம்” எனவும் அவர் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு, பாஜகவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ஆன்மீகதுவத்தை மையமாக கொண்டு அமையும் என்பது தெரிகிறது. தமிழக அரசியல் வளர்ச்சிகளின் பின்னணியில், இந்தக் கருத்துக்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் விவாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.