எப்படிலாம் யோசிக்கிறாங்க…! பணத்தை இதில் அனுப்புங்க… க்யூ ஆர் கோட் மூலம் யாசகம் கேட்கும் முதியவர்…. வினோத சம்பவம்….!!
SeithiSolai Tamil July 28, 2025 03:48 AM

தமிழ்நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்து வரும் காலத்தில், யாசகரும் தற்போது அதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கைபேசியில் கியூஆர் கோடு வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் நபர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்வமணி என்ற நபர் தான் யாசகம் கேட்கும் போதெல்லாம், கைபேசியில் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட கியூஆர் கோடு அட்டையை காட்டுகிறார். பசுமை நிற சாளரத்தில் கியூஆர் கோடு அட்டையை வைத்துள்ள அவர், “இப்போது எல்லாரும் ஃபோனிலேயே பணம் தராங்க. அதனால நானும் வங்கிக்கணக்கு துவங்கினேன், யாராவது உதவணும் நினைச்சா கோடு ஸ்கேன் பண்ணி பணம் தரலாம்” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனை அந்த பகுதியில் இருந்த சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த செயல் பலரிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. “யாசகராக இருந்தாலும் மாற்றங்களை ஏற்கும் மனப்பாங்கு இருக்கணும். இது புது மாதிரி ஒரு முன்னேற்றம்,” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்வமணி மேலும் கூறுகையில், “நேரடியாக பணம் தருபவர்களும் இருக்காங்க, ஆனா இப்ப அதிகமானவர்கள் ஆப்களில் பணம் அனுப்புறாங்க. எனக்கும் அதில வசதியாக இருக்கு. வருங்காலத்தில் இன்னும் நிறைய பேர் இதை பின்பற்றுவாங்க” என நம்பிக்கை தெரிவித்தார். இந்த சம்பவம், சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கும் சக்தி உள்ளதை மறுபடியும் நிரூபிக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.