பஞ்சாங்கம் ஜூலை 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil July 28, 2025 06:48 AM

பஞ்சாங்கம் ஜூலை 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 28

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

விஸ்வாவஸு ~ ஆடி ~ 12
~ {28/07/2025} திங்கட்கிழமை
1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ க்ரீஷ்ம ருதௌ.
4.மாதம் ~ ஆடி ( கடக மாஸம்).
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ சதுர்த்தி .
ஸ்ராத்த திதி ~ சதுர்த்தி .
7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்)
நக்ஷத்திரம் ~ பூரம் இரவு 08.00 PM வரை. பிறகு உத்திரம் .
அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம்.
நாம யோகம் ~ பரீக நாம யோகம் .
கரணம் ~ வணிஜை , பத்ரம் .
நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & மாலை 04.45 ~ 05.45 PM.
ராகுகாலம் ~ காலை 07.30 ~ 09.00 AM
எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.
குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
சூரிய உதயம் ~ காலை 05.53 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.37 PM.
சந்திராஷ்டமம் ~ திருவோணம் , அவிட்டம் .
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர்
இன்று ~ ஆடி பூரம் , நாக சதுர்த்தி , சுக்ல சதுர்த்தி விரதம்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (28-7-2025) ராசி பலன்கள்

மேஷம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுவீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : புரிதல்கள் உண்டாகும்.
பரணி : தாமதங்கள் குறையும்.
கிருத்திகை : ஆதாயகரமான நாள்.

ரிஷபம்

உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மேன்மை ஏற்படும். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஆர்வமின்மையான நாள்.

மிதுனம்

மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். புதிய வாகனம் குறித்த எண்ணம் மேம்படும். புதுவிதமான துறைகளில் ஆர்வம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : நெருக்கம் மேம்படும்.

கடகம்

காப்பீடு செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

சிம்மம்

இளைய உடன் பிறப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளால் இலாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் உருவாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : அனுகூலம் ஏற்படும்.
பூரம் : அனுபவங்கள் உண்டாகும்.
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.

கன்னி

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணி நிமித்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்து வழக்குகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரியிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தம்பதிக்குள் இடையே இருந்த வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும்.
சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

துலாம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். காணாமல் போன சில பொருள்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும்.
சுவாதி : முடிவுகள் பிறக்கும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் காணப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வர்த்தக தொடர்பான பயணம் மேம்படும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : உற்சாகமான நாள்.
அனுஷம் : பயணம் மேம்படும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

தனுசு

கொடுக்கல் – வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் வர்த்தக தொடர்பான முயற்சிகள் கைகொடுக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். படிப்பு தொடர்பாக மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : முயற்சிகள் கைகொடுக்கும்.
உத்திராடம் : அலைச்சல் அதிகரிக்கும்.

மகரம்

உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குழப்பங்களால் சில தடுமாற்றங்களும் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
திருவோணம் : மாற்றங்களும் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சு திறமைகள் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் திருப்பம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
சதயம் : லாபகரமான நாள்.
பூரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.

மீனம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அணுகுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : வெற்றிகரமான நாள்.

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

பஞ்சாங்கம் ஜூலை 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.