செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25ம் தேதி. தேவைப்பட்டால் செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் 5 வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2025 தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பாஜக தலைமையிலான NDA கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி ஆகியவை தங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தலாம் என கூறப்படுகிறது.