தமிழக மக்களே..! இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!
SeithiSolai Tamil August 04, 2025 01:48 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அழுத்தமுள்ள மண்டலத்தின் தாக்கமாகவே இந்த மழை ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.