“120 பவுன் நகை, , ₹38 லட்சம் இனோவா கார், ரூ.25 லட்சம் ரொக்கம்….” திருப்பூரில் இன்னொரு ரிதன்யா….! கண்ணீர் விடும் பெற்றோர்…. பகீர் சோக பின்னணி….!!
SeithiSolai Tamil August 07, 2025 04:48 AM

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தியின் மகள் பிரீத்தி (வயது 26), ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி திருமணமானது. திருமணத்தின்போது 120 பவுண் நகை, ₹25 லட்சம் ரொக்கம், ₹38 லட்சம் மதிப்பிலான இனோவா கார் உள்ளிட்ட பல பொருள்கள் வழங்கப்பட்டன. திருமணத்திற்குப் பிறகு, பிரீத்தியின் பூர்வீக சொத்து விற்பனையில் ரூ.50 லட்சம் வருவதை அறிந்த சதீஸ்வர், அந்த பணத்தையும் கேட்டு தொடர்ச்சியாக வற்புறுத்தல் மற்றும் மனதளவிலான அழுத்தங்களை தந்ததாக கூறப்படுகிறது.

சதீஸ்வரின் குடும்பத்தினர், வித்தியாசமான முறையில் பணத்திற்காக நெடுநாள் மன அழுத்தத்தை பிரீத்திக்கு ஏற்படுத்தியுள்ளனர். சொத்தையும் பணத்தையும் பெற்றுத்தரவேண்டும் என்பதற்காக கார் விற்றுத் தவிர்ந்த பணத்தை தரும்படியாகவும் பலமுறை அழுத்தங்கள் வந்துள்ளன.

இத்தகைய நிலைமைகளில் இருந்து தப்பிக்க முடியாமல், பிரீத்தி கடந்த மாதமாக தாயார் வீட்டில் தங்கி இருந்தார். தனது வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்த நிலையில், நேற்று மாலை தாயார் வெளியே சென்றபோது தனியாக இருந்த பிரீத்தி, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரிதாபத்தையும், சோகத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தியின் உறவினர்கள், “மாப்பிள்ளை தரப்பினர் பணம் வேண்டுமென்றே திருமணம் செய்தனர். 50 லட்சம் ரூபாய் சொத்துக்காக பிரீத்தியை தவிக்க வைத்தனர். மாப்பிள்ளை குடும்பம் முழுவதும் மோசடியாளர்கள். பிரீத்தியின் கைபேசியில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் சாட்களும், சதீஸ்வரின் வற்புறுத்தல்களை நிரூபிக்கின்றன” எனக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஸ்வரின் குடும்பத்தினர் இதுவரை தொடர்புக்கு வரவில்லை என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைகளால் இளம்பெண்கள் உயிரிழப்பது, பெண்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.