எட்டு வகையான கிருஷ்ணர் வழிபாடு... இதனை பின்பற்றி வழிபட்டால் அனுதினமும் நன்மைகள் உண்டாகும்...!
Seithipunal Tamil August 17, 2025 10:48 AM

கோவர்த்தனதாரி:
முதலில்,தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி நிற்கும் கிருஷ்ண பகவான். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் உள்ள பணக்கஷ்டங்கள் விலகுகின்றது.
ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):
ராதையுடன் நின்று காட்சி கொடுக்கும் கிருஷ்ணர். இவரை வழிபாடு செய்தால் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
 மதனகோபாலன்:
புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது கலை துறையில் சிறந்து விளங்கலாம்.


பார்த்தசாரதி:
மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதை உபதேசித்த திருக்கோலம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் தர்ம சிந்தனையும் வாழ்க்கையில் எதையும் சரியாக யோசித்து முடிவு எடுக்கும் திறனும் பிறக்கும்.   
சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர். இந்த கோலத்தில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
பாலகிருஷ்ணன்:
தவழும் கோலத்தில் கிருஷ்ணர். இந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணரின் படத்தை ஆலயங்களிலும் பலரது வீடுகளிலும் காணலாம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகிறது.
காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் புரியும் காளிய கிருஷ்ணன். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்ப்புகள் விலகி, மனதில் நம்பிக்கை உருவாகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.