முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நன்செய் நிலம் என்றால் 2.50 ஏக்கருக்கு மிகாமலும், புன்செய் நிலம் எனில் 5 ஏக்கருக்கு மிகாமல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1,00,000 லிருந்து ரூ.2,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20,000-லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணத்துக்கான நிதி உதவி ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2,500 லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.