“மக்களை ஏமாற்றத் தெரிந்தவரே சிறந்த அரசியல்வாதி” – நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு
Seithipunal Tamil September 03, 2025 01:48 PM

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “மக்களை ஏமாற்றத் தெரிந்தவர்தான் சிறந்த அரசியல்வாதி” என்ற கூற்றால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில நாக்பூரில் அகில பாரத் மகானுபவ பரிஷத் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட அவர், அரசியலும் நேர்மையும் குறித்து பேசியபோது, சில சுவாரஸ்யமான கருத்துகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:“மக்களை ஏமாற்றி நம்ப வைக்கத் தெரிந்தவர்தான் எப்போதும் வெற்றி பெறுகிறார். அரசியலில் நேரடியாக உண்மையைச் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் இருக்கின்றன.”“ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னுள்ளார்.”

“வாழ்க்கையிலும் அரசியலிலும் குறுக்குவழிகள் இருக்கலாம். ரெட் சிக்னலைப் புறக்கணித்து சாலையை கடக்கலாம். ஆனால் அதனால் பயணம் சுலபமாகாது, இடையே நின்றுவிடும். அதுபோல அரசியலிலும் குறுக்குவழிகள் நீடித்த பலனை தராது.”

“எனவே உண்மை, அர்ப்பணிப்பு, நேர்மையே ஒரு தலைவரின் நீண்டகால வெற்றிக்கான அடிப்படை.”கட்கரியின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.