பஞ்சாங்கம் செப்.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆவணி~ * 27 – (12.9.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ * ஆவணி மாஸம் { ஸிம்ம மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 2.00 pm வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 4.30 pm வரை பரணி பின் கிருத்திகை
யோகம் ~ வ்யாகதம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ திதித்வயம் பஞ்சமி ஷஷ்டி
இன்று ~ மஹா பரணி
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 12.9.2025
மேஷம்
சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் விரயங்களும் நேரிடும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த மந்த தன்மை விலகும். பயணம் மூலம் சிந்தனைகளில் சில தெளிவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
அஸ்வினி : விரயங்கள் உண்டாகும்.
பரணி : தெளிவுகள் ஏற்படும்.
கிருத்திகை : வேறுபாடுகள் அகலும்.
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்து பணிகளை முடிப்பீர்கள். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரப் போட்டிகளால் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
கிருத்திகை : வாதங்கள் மறையும்.
ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவு பெறும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.
புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.
தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். துணைவர் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தடைபட்ட சில பணிகள் முடிவடையும். சுப காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : முடிவுகள் பிறக்கும்.
பூரம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : தாமதங்கள் விலகும்.
மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வாகன பழுதுகள் மூலம் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் அலைச்சல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : விரயம் உண்டாகும்.
அஸ்தம் : கையிருப்புகள் குறையும்.
சித்திரை : அலைச்சல் உண்டாகும்.
நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். பழகும் விதங்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : வரவுகள் கிடைக்கும்.
சுவாதி : ஆதாயகரமான நாள்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் விற்பனைகள் அதிகரிக்கும். பத்திர தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதரிகள் வழியில் சில காரியங்கள் அனுகூலமாக முடியும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நண்பர்கள் வழியில் புரிதல்கள் அதிகரிக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : தந்திரங்களை அறிவீர்கள்.
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் பற்றிய சிந்தனைகள் உருவாகும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடிவரும். கோபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் கைகூடிவரும்.
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : முடிவுகள் பிறக்கும்.
சதயம் : மதிப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : அனுபவங்கள் ஏற்படும்.
மனதில் இருந்த குழப்பம் விலகும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வருமானம் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். முதலீடுகள் தொடர்பான செயல்களில் ரகசியம் காக்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
பூரட்டாதி : குழப்பம் விலகும்.
உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
ரேவதி : அறிமுகங்கள் ஏற்படும்.
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!
பஞ்சாங்கம் செப்.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil