ரூ.10 லட்சம் நகைகளை விற்று 2 கள்ளக்காதலனுக்கு கொடுத்த விட்டு மனைவி கணவன் மீது பொய் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை கோரேகான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஊர்மிளா ஊர்மிளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
இது ஒரு புறம் இருக்க அவருடைய மகளின் காதலன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது ஊர்மிளாவுக்கு மகளின் காதலனுடனும் பழக்கம் ஏற்பட்டு கள்ளதொடர்பாக மாறியது. மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளின் காதலனுடன் ஊர்மிளா உல்லாசமாக இருப்பாராம்.இந்த நிலையில் ஊர்மிளா தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்த நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை அவருடைய காதலனின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.
மேலும் வீட்டில் இருந்த நகை ஒன்றை அவருடைய மகளின் காதலனுக்கும் கொடுத்தார். 2 காதலர்களுக்கு நகைகளை விற்று கொடுத்து விட்டதால் கணவரிடம் மாட்டிக்கொள்வோம் என ஊர்மிளாவுக்கு பயம் வர அப்பாவி கணவர் மீது பழி சுமத்தினார்.
இதையடுத்து ஊர்மிளா அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று வீட்டில் இருந்த நகைகளை தனது கணவர் திருடிவிட்டதாக புகார் அளித்தார். போலீசார் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்ததில் வீட்டில் திருடு போனதற்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை. மேலும் ஊர்மிளா வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய மகளின் காதலனுடனும் அடிக்கடி பேசி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இதுகுறித்து ஊர்மிளாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது காதலனுடன் தலைமறைவாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஊர்மிளா மற்றும் அவருடைய மகளின் காதலனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.