கொழுந்தியா மீது ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவரை மைத்துனர் வெறித்தனமாக வெட்டிக் கொலைச் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (30), ஆட்டோ டிரைவரான இவர் பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களோடு கணபதி பிணமாக கிடந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன் (24) கணபதியைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோனிஷா வேறொருவருடன் சென்று விட்டார். இதனால் குழந்தைகள் மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன் வீட்டில் இருந்து வந்தனர். இதனால் கணபதி அடிக்கடி குழந்தைகளை பார்க்க மகேஸ்வரன் வீட்டிற்கு செல்லும் போது, மோனிஷாவின் மற்றொரு சகோதரியுடன் (கொழுந்தியாள்) நெருங்கி பழகியுள்ளார். மேலும் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து கொடுக்கும்படி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த அவரை மகேஸ்வரன் கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?