பார்க்கவே பதட்டமா இருக்கு…! மருத்துவமனை விடுதி டாய்லெட் வழியாக நுழைந்த கருநாகம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil September 16, 2025 04:48 AM

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் மருத்துவமனையின் மருத்துவர்கள் விடுதியில், செப்டம்பர் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, விஷமுள்ள கருப்பு நாகப்பாம்பு ஒன்று டாய்லெட் குழாய் வழியாக குளியலறைக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 அடி நீளமுள்ள இந்த பாம்பு, குளியலறைக்குள் வந்த ஒரு மருத்துவரை நோக்கி தன் படத்தை விரித்து சீறியது. இதனால் பதறிப்போன மருத்துவர் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்ப, விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில், விடுதியில் இருந்தவர்கள் பாம்பை விரட்ட முயன்றனர், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர், பாம்பு பிடிப்பவர் ஒருவரை அழைத்தனர். அவர், பதற்றமான சூழலில் கவனமாக செயல்பட்டு, பாம்பை பாதுகாப்பாக பிடித்து, பின்னர் லாட்புரா காட்டுப் பகுதியில் விடுவித்தார். இந்த சம்பவம், மருத்துவர்கள் விடுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.