எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் முக்கிய மாற்றம்..!
Top Tamil News September 16, 2025 09:48 AM

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ந்தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி வருகிற 26-ந்தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் 17, 18-ந்தேதி களில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன்படி, வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 29-ந்தேதி (திங்கட்கிழமை) பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.