இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு... 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை!
Dinamaalai September 16, 2025 08:48 PM

தூத்துக்குடியில் பெண்ணிடம்  செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3 தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடியில் கடந்த 2016ம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனசேகரன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்பது போன்று கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ராபின்சன் (43/25) மற்றும் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுந்தர் (எ) சுந்தரமூர்த்தி (38/25) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  விஜய் ராஜ்குமார் நேற்று குற்றவாளிகளான ராபின்சன் மற்றும் சுந்தர் (எ) சுந்தரமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்  கண்ணன் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.