காலையிலேயே அலர்ட்…!! தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?
SeithiSolai Tamil September 16, 2025 11:48 PM

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், அவசர தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் எனவும் IMD தகவல் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கும் முன்னரே இவ்வாறான மழை நிலைமை நிலவுவதால், நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. மக்கள் மற்றும் பயணிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.