அங்க சுத்தி, இங்க சுத்தி, தலைமை செயலகத்திற்கே வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாரிகள் பரபரப்பு..!
WEBDUNIA TAMIL September 17, 2025 11:48 AM

கேரளா அரசின் தலைமை செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக செயலில் இறங்கி, தலைமைச் செயலக ஊழியர்களை வெளியேற்றி, சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனையின்போது, சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், விமான நிலையங்கள், மற்றும் நீதிமன்றங்கள் போன்ற பல்வேறு முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய போலி மிரட்டல்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.