“ஒன்று கூடி அரபு நாடுகள்..” இஸ்ரேலை கட்டுப்படுத்த அமெரிக்கா தலையீடு அவசியம்… வளைகுடா நாடுகள் அதிரடி முடிவு …!!
SeithiSolai Tamil September 17, 2025 06:48 PM

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களின் இருப்பிடம் மீது இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, முழு உலகளாவிய கவனத்தை பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, அரபு இஸ்லாமிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. குறிப்பாக, தோஹாவில் நடைபெற்ற அரபு இஸ்லாமிய உச்சி மாநாட்டில், பல வளைகுடா நாடுகள் கலந்து கொண்டு இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன.

இத்துடன், கத்தாரின் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தும் வகையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டும் என்றும், அதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வளைகுடா நாடுகள் சார்பாக கூட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.