சமூக ஊடகங்களில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக, சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஈடுபடுத்தும் வீடியோக்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன. இவ்வகையில், சமீபத்தில் இணையத்தில் பரவலாக வைரலான ஒரு வீடியோ, இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், இரண்டு உயரமான மலைகளுக்கிடையிலான மிகச் சிறிய, குறுகிய, ஆபத்தான இடத்தில் ஒரு நபர் பாதுகாப்பு உபகரணமின்றி அமர்ந்திருப்பது காணப்படுகிறது. கயிறோ அல்லது கம்பிகளோ இல்லாமல், வெறும் பாறைகளுக்கு நடுவே உட்கார்ந்திருக்கும் அந்த நபர், தனது இடத்தை எடுத்துக்காட்ட ஒரு சிறிய கல்லை கீழே வீசுகிறார் – அந்தக் காட்சி பார்ப்போரின் இதயத்தை பதறவைக்கிறது.
இந்த வீடியோவை @ali_darabbii83 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்தவர் அலி தராபி. ஈரானின் இலம் மாகாணத்தைச் சேர்ந்த இவர், தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டி என்றும், இயற்கை நடைபயணங்கள், முகாம்கள் மற்றும் மலையேறல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர் என்றும் தனது சுயவிவரத்தில் தெரிவித்துள்ளார். அவர் ஒரு தொழில்முறை சுற்றுலா வழிகாட்டி என்றும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவங்களை வழங்குவதே தன் நோக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், இந்த வீடியோவில் அவர் மேற்கொண்ட செயல்கள் அவரது சொந்த பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.
View this post on Instagram
A post shared by علی دارابی || Ali Darabi (@ali_darabbii83)
மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியவுடன், மக்கள் பலவிதமான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். ஒருவர், “கடவுள் உங்களுக்கு இவ்வளவு அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார், ஏன் இந்த மாதிரி ஆபத்தான செயல்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “உனக்கு பயமா இல்லையா, சகோதரா? இங்கிருந்து விழுந்தால் நேராக சொர்க்கத்திற்குப் போய்விடுவாய்!” என்று எழுதியுள்ளார்.