சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் Dhinasari Tamil %name%
சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் (06012) நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,
7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) அக்டோபர் 1 8 15 22 29 ஆகிய புதன்கிழமைகளில் சென்னையில் இருந்து அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 08.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054) செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 09.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள்சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) சென்னையில் இருந்து செப்டம்பர் 26 அக்டோபர் 3 10 17 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 01.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 25 அக்டோபர் 2 9 16 23 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை ரோடு சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கை பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.
சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில்தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06018)சென்னையில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.15
மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017)சென்னையில் இருந்து செப்டம்பர் 30 அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில்டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06121) சென்னையில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் செங்கோட்டை – டாக்டர் எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122) செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 15 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு துவங்குகிறது.
வண்டி எண் 06121/06122 சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயிலுக்கு சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால பயணங்களுக்கு வசதியாக, தூத்துக்குடி – சென்னை எழும்பூர் – தூத்துக்குடி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 28, 2025 வரை இயக்கப்படும்.
இந்த ரயில், பயணிகளுக்கு ஆறுதலையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில், ஏசி டூ டயர், ஏசி த்ரீ டயர், ஸ்லீப்பர் கிளாஸ், ஜெனரல் செகண்ட் கிளாஸ் மற்றும் திவ்யாஞ்சன் நட்பு ரயில் பெட்டிகளைக் கொண்டதாக இயங்கும்.
முன்பதிவு 17.09.2025 அன்று காலை 08:00 மணிக்குத் தொடங்குகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் News First Appeared in Dhinasari Tamil