ஆயுத பூஜை தீபாவளி ஸ்பெஷல்..! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil September 18, 2025 10:48 AM

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் வசதிக்காக தென் ரயில்வேயின் கீழ் பல்வேறு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்காக வரும் அக்டோபர் 29-ஆம் தேதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ரயில்களில் பயணிக்க விரும்பும் மக்கள், இன்று (செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவில் பதிவு செய்து டிக்கெட்டுகளை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். தீபாவளி காலத்தில் அதிகப்படியான கூட்டம் ஏற்படும் என்பதால், அனைத்து பயணிகளும் தங்களுடைய பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ரயில்வே இணையதளம் மற்றும் முன்பதிவு கவுன்டர்களில் சீக்கிரம் முன்பதிவு செய்து பயண வசதிகளை உறுதிப்படுத்துமாறு ரயில்வேத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.