ஈபிஎஸ் முதல்வராக வேண்டும் என்று டிடிவி தினகரன் தான் கூறினார்.. நயினார் நாகேந்திரன் அதிரடி
Webdunia Tamil September 18, 2025 01:48 PM

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மறுத்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால், தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரமாட்டோம் என டி.டி.வி. தினகரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

"முன்பு ஒருமுறை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்றும், அமித்ஷா சொன்னால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக பிரசாரம் செய்வோம் என்றும் தினகரன் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என்று எனக்கு தெரியவில்லை" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

அவர் ஏற்கனவே கூறிய கருத்துக்களுக்கும், தற்போது அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் உள்ள இந்த முரண்பாடு, அரசியல் வட்டாரங்களில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.