சில விஷயங்களை ஏன்? எதற்கு என்று காரணம் தேடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டு பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும். அவர்களின் அனுபவம் தான் நமது வயது என்பதை சில விஷயங்களில் நாம் நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். அது தெரியாததால் தான் சாதாரண காய்ச்சலுக்கு கூட நடுராத்திரியில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் ஓடுகிறோம். எதற்கெடுத்தாலும் மாத்திரை, மருந்துகள் என்று வைட்டமின்களுக்கும் உணவுமுறைகளை நம்பாமல் டானிக் வாங்கிக் கொடுத்து குழந்தைகளின் உடல்நலத்தையும் கெடுக்கிறோம்.
நாளும் கிழமையும் உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பார்கள். அதனால வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை எல்லா பண்ணாதீங்க. ஏனெனில் வெள்ளிக்கிழமைகள் இறை வழிபாட்டுக்கு உன்னதமான உகந்த தினமாக கருதப்படுகிறது. மதங்களைக் கடந்து, வெள்ளிக்கிழமை முக்கிய கிழமையாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் தானே செல்வத்தை வழங்குபவர். அதனால் தான் சுக்கிரவார் என்று வட இந்தியர்கள் வெள்ளிக்கிழமையைக் கொண்டாடுகிறார்கள். அதனால, கூடுமானவரை வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீங்க. மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் உங்கள் கைகளில் தங்க மறுக்கிறதா? இந்த விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கோங்க. மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இவற்றை செய்யாதீங்க. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம். அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க. அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். அதே போன்று பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.
இவையெல்லாமே பெரிய பரிகாரங்களோ, பணத்தை அதிக செலவு செய்து கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளோ இல்லை. நம் அன்றாட வாழ்க்கை முறையில், நம்மால் எளிதில் கடைப்பிடிக்க கூடியவை தான்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?