10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இனி 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என மாணவர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பொதுத்தேர்விற்கான அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்படும். 2026-ம் ஆண்டில் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணியில் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊதியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதனால், பொதுத்தேர்வு பணிகள் அதற்கு முன்னரே நிறைவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2015-26 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் அட்டவணை வெளியாகும். அட்டவணையில், தேர்வு தேதிகள், தேர்வு நடைபெறும் நேரம், செய்முறை தேர்வு மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
பொதுவாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதமும் நடைபெறும். முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும். கடந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் படி தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் மே முதல் வாரமே வெளியானது. ஆனால், 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்வு முன்னரே நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் மே இரண்டாம் வாரத்திற்கு பின்பு நடைபெறும் என கருதப்படுவதால், மே முதல் வாரத்திலேயே முடிவுகள் வெளியிடும் வகையில் பொதுத்தேர்வு தேதிகள் அமைக்கப்படும் என கருதப்படுகிறது.
12-ம் வகுப்பிற்கு மார்ச் மாதமும், 10-ம் வகுப்பிற்கு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பொதுத்தேர்வு முடிவுப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்முறை தேர்வு பிப்ரவரியில் நடைபெறும்.
பள்ளிக் கல்வித்துறையின் நாட்காட்டியின் படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான வேலை நாளாக ஏப்ரல் 24-ம் தேதியே கடைசி நாள் ஆகும். 25 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதனிடையே 11-ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் முழு ஆண்டுத் தேர்வு நடைபெறலாம்.