தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அடுத்த 3 மணிநேரத்திற்குள் (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Edited by Siva