மூன்று நூறு கோடி படங்கள் கொடுத்த ஹீரோ...! ஆனா அப்பா இன்னும்ஜெராக்ஸ் கடையில்தான்...?
Seithipunal Tamil October 27, 2025 03:48 AM

சினிமா உலகில் பிரபலமாகி, கோடிக்கணக்கில் ரசிகர்களை பெற்ற பிறகும் சில நட்சத்திரங்கள் தங்கள் எளிமையையும் குடும்பத்தின் பணிவையும் இழக்கவில்லை. அதற்கு சிறந்த உதாரணம், பான் இந்தியா ஸ்டார் யாஷ், அவர் உலகளவில் புகழ் பெற்ற பிறகும், அவரது தந்தை இன்னும் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல், தமிழ் திரையுலகில் தற்போது அனைவராலும் பேசப்படும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் குடும்பத்திலும் இதேபோன்ற ஒரு எளிமையான கதை இருக்கிறது.தனது மகன் தொடர்ந்து நூறு கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறான் என்றாலும், பிரதீப்பின் தந்தை இன்னும் தனது பழைய ஜெராக்ஸ் கடையையே நடத்தி வருகிறார் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப், பின்னர் ‘லவ் டுடே’ மூலம் ஹீரோவாக வெற்றிகரமாக மாறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான அந்தப் படம் ரூ.100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து ‘டிராகன்’ படமும் அதே வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது வெளிவரவிருக்கும் ‘டியூட்’ படத்துடன், பிரதீப் தனது மூன்றாவது நூறு கோடி கிளப்புக்குள் நுழையப் போவதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதீப் நெகிழ்ச்சியுடன் கூறினார்.“என் அப்பா இன்னும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நான் கார் வாங்கித் தருவதாகச் சொன்னாலும், அவர் இன்னும் பேருந்தில்தான் போகிறார். அது தான் அவருக்கு சுகம்.”இளைய தலைமுறைக்கே ஒரு ஊக்கமளிக்கும் இந்தக் கதையால், பிரதீப்பின் குடும்ப எளிமை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.