இந்தியருக்கு நடந்த கோரம்…. காரில் சிறுநீர்… தலையில் அடித்த கொலைகாரன்! – கனடாவில் உயிரிழந்த தொழிலதிபர்! கதறும் குடும்பம்…!!
SeithiSolai Tamil October 31, 2025 12:48 PM

கனடாவின் எட்மண்டன் நகரில், காரில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதுத் தொழிலதிபர் அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo) கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இரவு, சாகூவும் அவரது தோழியும் இரவு உணவு முடிந்து தங்கள் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் சாகூவின் காரில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். சாகூ இதைக் கண்டு, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கண்டித்துக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “நான் விரும்பியதைச் செய்வேன்” என்று பதிலளித்துவிட்டு, சாகூவை நோக்கி வந்து தலையில் பலமாகத் தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் சாகூ கீழே விழுந்ததால், அவரது தோழி உடனடியாக 911-க்கு அழைத்துள்ளார். படுகாயம் அடைந்த சாகூ சில நாட்கள் உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் (Life Support) போராடிய நிலையில், ஐந்தாம் நாளில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கைல் பாபின் (Kyle Papin) என்ற நபர் கைது செய்யப்பட்டு, ‘கடுமையான தாக்குதல்’ (Aggravated Assault) குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சோகமான நிகழ்வு, கனடாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. பொது நாகரிகம் மற்றும் தனிப்பட்ட சொத்துக்கு மரியாதை அளிக்கும் உணர்வு இல்லாததால், ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பாழாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.