திருப்பதியில் ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்... பக்தர்கள் நெகிழ்ச்சி!
Dinamaalai October 31, 2025 10:48 PM

ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப யாகம் நேற்று திருமலையில் பக்தி பூர்வமாகவும், வெகு சிறப்பாகவும் நடைபெற்றது.பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 9 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூடை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் ஒப்படைத்தனர்.

பின்னர் நடைபெற்ற புஷ்ப யாகத்தில், மலையப்பசுவாமி மற்றும் தாயார் திருவுருக்கள் மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபட்டனர்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவிற்குப் பிறகு புஷ்ப யாகம் நடத்துவது பழங்கால மரபு. கார்த்திகை மாதம் பெருமாளின் திருவோணம் நட்சத்திரத்தில் இவ்விழா நடைபெறும். கடந்த 15-ம் நூற்றாண்டு வரை இதை அரசர்கள் நடத்தி வந்தனர். பின்னர் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த இவ்விழா, 1980 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இவ்வாண்டு புஷ்ப யாகத்தில் 16 வகை மலர்கள், 6 வகை துளசி மற்றும் தவனம் போன்ற இலைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 5 டன் மலர்கள் தமிழகத்திலிருந்து, தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்,” என்றார்.திருமலையில் மலர்களின் மணமும், பக்தர்களின் ஓசைகளும் கலந்த இந்த புஷ்ப யாகம் ஆன்மீக ஆனந்தம் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.