சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்!
Dinamaalai November 03, 2025 03:48 PM

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சில மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், தற்போது கிழக்கு திசை காற்றின் மாற்றம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், மழையின்போது திறந்த வெளிகளில் தங்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.